65வது திருமூலர் திருமந்திர தமிழ் மூவாயிரம் முற்றோதுதல்

Thu Jan 28 2021 at 10:00 am to 04:30 pm

Thavathiru Nagamani Adigalar School | Chennai

Thavathiru Nagamani Adigalar Temple
Publisher/HostThavathiru Nagamani Adigalar Temple
65\u0bb5\u0ba4\u0bc1 \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc2\u0bb2\u0bb0\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0bb0 \u0ba4\u0bae\u0bbf\u0bb4\u0bcd \u0bae\u0bc2\u0bb5\u0bbe\u0baf\u0bbf\u0bb0\u0bae\u0bcd \u0bae\u0bc1\u0bb1\u0bcd\u0bb1\u0bcb\u0ba4\u0bc1\u0ba4\u0bb2\u0bcd
Advertisement
திகழ்ஞானத்திருவுடையீர்
பொன்னார் திருவடிக்கு வணக்கம். சென்னை மாநகரில் உள்ள பெருங்குடி எழில்ஞான பூமியில் உள்ள நாம் நன்மார்க்கம் அடைய சன்மார்க்க சற்குருவாய் இருந்து அருள்பாலிக்கும் குருநாதர் எளிய மக்களுக்கு மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர், வைத்திய சித்தர் சிவராசயோகி சன்மார்க்க சீலம் உரைத்த மாதவயோகி ஸ்ரீமத் நாகமணி அடிகளார் ஆவார்
அவர்கள் தம் வாழ்நாளில் எண்ணாயிரம் மக்களின் துயர் பிணி தீர்த்து திருமயிலையில் வாழ்வாங்கு வாழ்ந்த ஞானி நாகமணி அடிகளாரின் திருமேனி அடங்கிய இடமே பெருங்குடி ஆகும். அவ்விடம் இஞ்ஞான்று சாமாதித் திருக்கோயிலுடன் எழிலுடன் விளங்கி கல்விச் சோலையும் விளங்கி நவயோகம் கைகூடி அறிவோர் இல்லமாக விளங்குகிறது அத்தகைய சமாதி நிலைதிருக்கோயில் இறைவன் திருவுளப்பாங்கின் வண்ணம் சார்வாரி வருடம் தை மாதம் 15 ஆம் நாள் ஆங்கிலம் 28.01.2021 வியாழக்கிழமை தைப்பூசத்திருநாளன்று காலை திருநெறிய
திருமுறைகளும் திருமந்திர திருவாசகமும் ஒலிக்கும் சுப ஓரையில் காலை 7.30 மணி அளவில் கருவரை விமானமும் சமாதி நிலை கருவறைச் சந்ந்தியும் மகாகும்பாபிஷேகம் (எ) திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைப்பெறும். அதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை திருமூலர் திருமந்திரம் முற்றோதுதல் நடைபெறும். அனைவரும் வருக அருள் நலம் பெறுக
இப்படிக்கு
தவத்திரு நாகமணி அடிகளார் கல்விக்குழு மற்றும் ஆன்மீக சைவநெறிக்குழு திருமூலர் திருமந்திர ஞானத் தபோவனம் குழுவினர்
27.1.2021 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் தொடங்கி முதல் காலம் நடைபெறும் மாறுநாள் காலை 5.30 முதல் 7.30 மணி வரை சிவத்திரு.சங்கரநாராயண சுவாமி அவர்கள் தலைமையில் ஞாலம் அளந்த மேன்மைச் செந்தமிழ் திருநெறிய திருமுறை நெறிமுறையே திருமந்திர திருவாசக முறையாக திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும்.
Advertisement

Event Venue & Nearby Stays

Thavathiru Nagamani Adigalar School, MGR salai, Chennai, Tamil Nadu, India 600096, India

Sharing is Caring: